• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் பென்சன் ஆர்டர்கள் வழங்கும் நிகழ்வு

January 28, 2023 தண்டோரா குழு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் பென்சன் ஆர்டர்கள் வழங்கும் நிகழ்வு நடக்கிறது

கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன உதவி கமிஷனர் (பென்சன்) ஆல்பர்ட் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை குறிக்கும் அகாம் நிகழ்வை வரும் ஆகஸ்ட் 15, 2023 வரை கொண்டாடுகிறது. இது சம்பந்தமாக, பிரயாஸ் தொடர்பான ஒரு நடவடிக்கையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் கோவை மண்டல அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் 31ம் தேதி காலை 10.30 மணிக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அலுவகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிராயஸ் என்பது பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறும் நாளில் ஓய்வூதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ் ஓய்வூதியத்திற்குத் தகுதியான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் உறுப்பினர், ஓய்வூதியக் கோரிக்கையை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம். 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஓய்வுபெறும் தகுதியான உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான பென்சன் ரிலிஸ் ஆர்டர்கள் மேற்படி நிகழ்வின் போது வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க