• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தொண்டாமுத்தூரில் ரூ.16.13 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு !

February 22, 2021 தண்டோரா குழு

ரூ.16.13 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி பேரூராட்சி மோளப்பாளையம், நாதேகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை, ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் தென்னமநல்லூர், மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.16.13 கோடி மதிப்பில் சாலைப்பணிகள் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) ரூபன்சங்கர்ராஜ், தொண்டாமுத்தூர் ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க