ரூ.16.13 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி பேரூராட்சி மோளப்பாளையம், நாதேகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை, ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் தென்னமநல்லூர், மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.16.13 கோடி மதிப்பில் சாலைப்பணிகள் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) ரூபன்சங்கர்ராஜ், தொண்டாமுத்தூர் ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு