மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணை நிரம்பி வருவதால் இரு எல்லை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக – கேரள எல்லையான வாளையாறில், வாளையாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்தம் கொள்ளளவு 64 அடி, இந்த அணையில் சேகரிக்கப்படும் நீர் கேரள பாசனத்திற்கு செல்கிறது. நீர் தேக்கப்பகுதி தமிழக எல்லையில் அமைந்துள்ளதால் வாளையாறு அருகே உள்ள மாவூத்தம்பதி, நவக்கரை, உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து காணப்படும். வரட்சியால் வாளையாறு அணையில் நீர் வற்றி மிக குறைவான நீர் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையாலும், எட்டிமடை, க.க.சாவடி பகுதியில் பெய்த மழையால் வழிந்த நீரால் கடந்த மூன்று நாட்களில் அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இன்னும் இரண்டு தினங்களின் அணையின் மொத்த கொள்ளளவான 64 அடியும் நிறையும் தருவாயில் அணை உள்ளது. அணையில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் தமிழக கேரள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !
நாடு தழுவிய ஐ கேர் மான்ஸூன் சர்வீஸ் கேம்ப் இசுசு மோட்டார்ஸ் இந்தியா நடத்துகிறது
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி