• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியினர் ஆர்பாட்டம்

April 14, 2018 தண்டோரா குழு

காஷ்மீரில் ஆசிஃபா, உன்னோவில் தலித் சிறுமி, ஜார்கண்டில் அஃப்சானா ஆகியோரை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொடுமைப்படுத்திய பாஜக, சங்பரிவார் கயவர்களையும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பாடும் பாஜக அரசுகளையும், தலைவர்களையும் கண்டித்து கோவை ஆத்துப்பாலம் பெரியார் சிலை அருகில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் கோவை மாவட்டத்தலைவர் கே.எஸ்.அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மேலும், இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் EMS இப்ராஹீம், மாவட்ட பொதுச் செயலாளர் ஆர். பீர் முகம்மது, துணைத்தலைவர்கள் AJ ரெஜீனா, MS சபீர் அலி, மாநில நிர்வாககுழு உறுப்பினர் ஷாஜஹான், தெற்கு மண்டலத் தலைவர் முஜிப், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் ஷபீர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க