• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடரும் தொலைக்காட்சி ஊழியர்கள் தற்கொலை.

March 16, 2016 வெங்கி சதீஷ்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக தொலைக்காட்சி நடிகரும் சினிமாவில் பல படங்களிலும் நடித்து வந்த சாய் பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டார்.

அதற்கு அவரது குடும்ப பிரச்சனையே காரணம் எனத் தெரியவந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை செகன்ந்ராபாத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த, ஜெமினி டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிரோஷா திடீரென தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து கூறிய காவல்துறையினர், நிரோஷாவின் காதலர் நள்ளிரவு 12 மணியளவில் போன் செய்து நிரோஷா என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததால் அவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார் எனவே அவரைக் காப்பாற்றுங்கள் எனக் கூறினார்.

அதையடுத்து சம்பவ இடத்திற்கு நாங்கள் செல்லும்போது அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். அவரைப் பிரேதமாக மட்டுமே மீட்க முடிந்தது எனத் தெரிவித்தனர். அடுத்தடுத்து தொலைக்காட்சி ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்வது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க