• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கோவையில் தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு

March 27, 2019 தண்டோரா குழு

தேர்தல் விதிமுறைகள் மீறியதாக கோவையில் தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை தனியார் பள்ளியில் கடந்த 24 ஆம் தேதி மக்கள் நீதிமையத்தின் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்ட மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் அனுமதி பெறப்படாததால் தேர்தல் பறக்கும் படையினரால் பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் உதவி அலுவலர் பள்ளியில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி அலுவகர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் பள்ளியின் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறை மீறுதல், விசாரணை செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்த நிறுத்தல் ஆகிய இரு பிரிவுகளில் கோவை சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க