• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தலில் மோதல் வழக்கு வானதி சீனிவாசன் விடுதலை

November 26, 2021 தண்டோரா குழு

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க் கட்சிகளுடன் ஏற்பட்ட மோதல் வழக்கில் வானதி சீனிவாசன் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2016 ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர்களாக பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரம் முடிந்து வானதி சீனிவாசன் கடைவீதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற போது அதிமுகவினருடன் மோதல் ஏற்பட்டது. இது குறித்து கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது இன்று கோவை கூடுதல் நீதிமன்றம் எண் 5 ல் நடைபெற்ற நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 6 பேர் நேரில் ஆஜராகினர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம் மற்றும் பாபு ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

மேலும் படிக்க