தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் அரசியல் பேச வரவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக – பாஜக- பாமக இடையே கூட்டணி உறுதியானது. அதைப்போல் நேற்று திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.
தேமுதிகவை அதிமுக கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையில், அண்மையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை அரசியல் கட்சி தலைவர்களும் , திரையுலக பிரபலங்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, இன்று நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் , திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்க அவரை நேரில் சந்தித்தேன். அரசியல் குறித்து பேச வரவில்லை, மனிதாபிமான உணர்வுடன் தான் சந்தித்தேன்.விஜயகாந்த் நல்ல முறையில் தேறி வந்துள்ளார்.
மரியாதையுடன் அண்ணன் என்று அழைக்கக் கூடியவர் விஜயகாந்த். கருணாநிதி மீது பக்தி கொண்டவர். கருணாநிதி மறைந்தபோது விஜயகாந்த் வெளிாட்டில் இருந்தார். தாங்க முடியாமல் அவர் அழுத காட்சி இன்றைக்கும் மறக்க முடியாது. நாடு திரும்பியதும் நேரடியாக கலைஞர் நினைவிடம் சென்று அழுத காட்சி மறக்க முடியாதது. இன்னும் ஆரோக்கியமாக அவர் திகழ வேண்டும் என்று அவரிடம் தெரிவித்துக் கொண்டேன் என அவர் தெரிவித்தார்.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்