• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு

February 21, 2019 தண்டோரா குழு

பரபரப்பான அரசியல் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று முன்தினம் அதிமுக – பாஜக- பாமக இடையே கூட்டணி உறுதியானது. அதைப்போல் நேற்று திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

இதற்கிடையில் , தேமுதிகவை அதிமுக கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது. அண்மையில் தமிழகம் வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, அவர் விஜயகாந்தை நலம் விசாரிப்பதற்காகவே வந்ததாக அவர் கூறினார். எனினும் தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்தார். நலம் விசாரிப்பதற்கு தான் விஜயகாந்தை சந்தித்ததாக அவர் கூறினார். ஆனால், விஜயகாந்த் – திருநாவுக்கரசர் இடையேயான சந்திப்பு அரசியல் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க