October 14, 2019
தண்டோரா குழு
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கோவை மாவட்ட தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் சமீப காலங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பும், ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தரக்கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கோவை மாவட்ட தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கோவை மாவட்ட தேசிய முற்போக்கு கழக செயலாளர்கள் காட்டன் செந்தில்,எஸ் எம் முருகன்,தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.