February 11, 2019
தண்டோரா குழு
கோதண்டராமர் சிலை பாலத்தை கடப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் கிருஷ்ணகிரி அருகே தொடர்ந்து 4-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு கோதண்டராம சுவாமி தேவஸ்தான கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான தெற்கு பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், ஆதிசேஷன் சிலை (7 தலை பாம்பு) மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை கொரக்கோட்டை குன்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரே கல்லில் கோதண்டராமர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலை 380 டன் எடை கொண்டயும் 64 அடி உயரம் கொண்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி அன்று பாறை வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 240 டயர்கள் கொண்ட சரக்கு லாரியில் எடுத்து செல்லப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியே கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. சிலை கிருஷ்ணகிரியை வந்தடைந்தடைந்தாலும் மாநில எல்லையை கடப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு மார்கண்டேயன் ஆற்றை கோதண்டராமர் சிலை கடந்தது அடுத்ததாக சாமல்பள்ளம் அருகே உள்ள சிறிய பாலத்தை கடப்பதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் பாலத்தின் உறுதி தன்மையை காரணமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை சிலை பாலத்தை கடக்க அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோதண்டராமர் சிலை கர்நாடக எல்லையை கடக்க முடியம்மல் தொடர்ந்து 4-வது நாளாக சாமல்பள்ளம் பகுதியில் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.