May 14, 2018
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாய்கள் தாக்கியதில் 12 வயது சிறுமி உயிரிழந்தார். கடந்த 6 மாதங்களில் சிதப்பூர் மாவட்டத்தில் 13 பேர் நாய்கள் கடித்து இறந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சிதப்பூர் மாவட்டம் மகேச்பூர் சில்வாரா கிராமத்தை சேர்ந்த 12 வயதான ரீனா என்கின்ற சிறுமியை அங்குள்ள 7 தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த 300 கிராமவாசிகள் அந்த நாய்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்து போராட்டம் நடத்தினர்.
ரீனா வின் தந்தையும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளிக்கும் வரை அவரது இறுதிச் சடங்கைச் செய்ய மாட்டேன் என்று கூறினார்.
அதன் பின் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் குல்கர்னி சில நாட்களில் நாய்களின் எண்ணிக்கை குறைப்போம் என்று உறுதியளித்தார்.இதனை அடுத்து கிராமவாசிகள் போராட்த்தை கைவிட்டனர்,
இந்த தெரு நாய்களின் தாக்குதலை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை சிதப்பூர் கிராம மக்கள் மத்தியில் குழந்தைகளின் மேல் உள்ள கவலை இருந்து கொண்டுதான் இருக்கும்.