• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

December 9, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு கராத்தே விளையாட்டு சங்கம் மற்றும் சாய்டு காய் டூ கோயம்புத்தூர் அட்வென்சர் அகாடமி ஆப் மார்சல் ஆர்ட்ஸ் இணைந்து கலைஞர் கோப்பை-2021 தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி சூலூரில் உள்ள பாப்பம்பட்டி பிரிவு கலைஞர் கல்லூரி தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் நடத்தியது.

தென்னிந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஏசியன் கராத்தே பெடரேஷன் நடுவர் சென்சாய் அறிவழகன் வரவேற்புரை வழங்கினார். தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவர் சென்சாய் சாய்புரூஸ் முன்னிலை வகித்தார். கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கராத்தே சங்கம் பொதுச் செயலாளர் சென்சாய மோகன், சென்சாய் மாரியப்பன் சொக்கலிங்கம், சென்சாய் வேலு, சென்சாய் டோமினிக் சாவியோ மற்றும் கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி துறை இயக்குனர்கள் ஜெயபிரகாஷ், ஜெகன், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கராத்தே சங்கத்தலைவர் சென்சாய் சாய்புரூஸ் கூறுகையில்,

தமிழகத்தில் இதுவரை கலைஞர் கோப்பை முதல் முறையாக கோவையில் தமிழ்நாடு கராத்தே சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது. இனி ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டி தொடர்ந்து நடைபெறும் இப்போட்டியில் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் தளபதி ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படுகிறது என்றார்.

தொடர்ந்து ஏசியன் கராத்தே பெடரேஷன் நடுவர் சென்சாய் அறிவழகன் கூறுகையில்,

கராத்தே போட்டியில் மாணவர்கள் வருங்காலத்தில் மாவட்டம், மாநில மற்றும் அகில இந்திய அளவில் போட்டியில் தயார் செய்யும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இங்கு சப் ஜூனியர், சீனியர், கட்டா, குமிட்டே போன்ற போட்டிகள் நடுவர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும் என்றார்.

மேலும் படிக்க