• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்மேற்கு பருவமழை 33 சதவீதம் அதிகம்

August 17, 2017 தண்டோரா குழு

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 33 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை, ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலையில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 1 முதல் தற்போது வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 21 செ.மீ., பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 33 சதவீதம் அதிகம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க