• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்னிந்தியாவில் முதன் முதலாக கோவையில் எடை குறைப்பதற்கான சிகிச்சை மையம்

December 26, 2018 தண்டோரா குழு

தென்னிந்தியாவில் முதன் முதலாக கோவையில் என்டோஸ்கோபி எடை குறைப்பதற்கான சிகிச்சை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெம் மருத்துவமனையானது இந்தியாவில் உலகம் தரம் வாய்ந்த மருத்துவமனையாக இருந்து வருகிறது. இம்மருத்துவமனையில் என்டோஸ்கோபி எடை குறைப்பு சிகிச்சை துறையானது தென்னிந்தியாவில் முதன் முதலாக துவங்கப்பட்டு உடல் பருமன் மற்றும் அதன் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கபட்டு வருகிறது.

இந்த என்டோஸ்கோபி எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை மையத்தை ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இது குறித்து மருத்துவமனையின் தலைவர் பழனிசாமி கூறுகையில்,

இந்தியாவில் உடல் பருமன் வராது என்ற நிலை மாறி தற்போது உலக அளவில் மூன்றாவது உடல் பருமன் நோய் கொண்டதாக மாறியுள்ளது என்றும் இந்த நோயை தீர்க்க சரியான சிகிச்சை அளிக்க வேண்டியது மிக முக்கியம் என்று கூறினார்.

மேலும் படிக்க