• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னிந்தியாவில் முதன் முதலாக கோவையில் எடை குறைப்பதற்கான சிகிச்சை மையம்

December 26, 2018 தண்டோரா குழு

தென்னிந்தியாவில் முதன் முதலாக கோவையில் என்டோஸ்கோபி எடை குறைப்பதற்கான சிகிச்சை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெம் மருத்துவமனையானது இந்தியாவில் உலகம் தரம் வாய்ந்த மருத்துவமனையாக இருந்து வருகிறது. இம்மருத்துவமனையில் என்டோஸ்கோபி எடை குறைப்பு சிகிச்சை துறையானது தென்னிந்தியாவில் முதன் முதலாக துவங்கப்பட்டு உடல் பருமன் மற்றும் அதன் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கபட்டு வருகிறது.

இந்த என்டோஸ்கோபி எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை மையத்தை ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இது குறித்து மருத்துவமனையின் தலைவர் பழனிசாமி கூறுகையில்,

இந்தியாவில் உடல் பருமன் வராது என்ற நிலை மாறி தற்போது உலக அளவில் மூன்றாவது உடல் பருமன் நோய் கொண்டதாக மாறியுள்ளது என்றும் இந்த நோயை தீர்க்க சரியான சிகிச்சை அளிக்க வேண்டியது மிக முக்கியம் என்று கூறினார்.

மேலும் படிக்க