December 26, 2018
தண்டோரா குழு
தென்னிந்தியாவில் முதன் முதலாக கோவையில் என்டோஸ்கோபி எடை குறைப்பதற்கான சிகிச்சை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெம் மருத்துவமனையானது இந்தியாவில் உலகம் தரம் வாய்ந்த மருத்துவமனையாக இருந்து வருகிறது. இம்மருத்துவமனையில் என்டோஸ்கோபி எடை குறைப்பு சிகிச்சை துறையானது தென்னிந்தியாவில் முதன் முதலாக துவங்கப்பட்டு உடல் பருமன் மற்றும் அதன் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கபட்டு வருகிறது.
இந்த என்டோஸ்கோபி எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை மையத்தை ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இது குறித்து மருத்துவமனையின் தலைவர் பழனிசாமி கூறுகையில்,
இந்தியாவில் உடல் பருமன் வராது என்ற நிலை மாறி தற்போது உலக அளவில் மூன்றாவது உடல் பருமன் நோய் கொண்டதாக மாறியுள்ளது என்றும் இந்த நோயை தீர்க்க சரியான சிகிச்சை அளிக்க வேண்டியது மிக முக்கியம் என்று கூறினார்.