• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்னம்பாளையத்தில் இளைஞரை கத்தியை காட்டி கொலை மிரட்டியவர் கைது

June 16, 2020 தண்டோரா குழு

கோவை தென்னம்பாளையம் பகுதியில் இளைஞரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் அடுத்த தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் மதன்குமார். ஆட்டோ ஓட்டுநரான மதன்குமார் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு இந்துமுன்னணி அமைப்பிலிருந்து விலகி விஎச்பி அமைப்புக்கு சென்றுவிட்டார். இதனால் இந்து முன்னணி அமைப்பிலுள்ள சக்தி உட்பட மூன்று பேர் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதன் குமாரின் குடியிருப்பு பகுதிக்கு வந்த சக்தி உட்பட நான்கு பேர் மதன்குமாரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் மதன்குமார் புகார் அளித்தார். இதனிடையே சக்தி கத்தியைக் காட்டியை மிரட்டி வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார், சக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க