• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய சிவராம் நகர் குடியிருப்போர் சங்கம்

December 7, 2023 தண்டோரா குழு

கோவை சுங்கம் பகுதியில் சிவராம் நகர் உள்ளது.இப்பகுதியின் பொதுமக்கள் சார்பில் சிவராம் நகர் நல சங்கம் செயல்பட்டு வருகிறது.225 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 15 வருடங்களாக மாநகராட்சி தூய்மை பணியாளராக பாப்பம்மாள் என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில்,புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பாப்பம்மாளுக்கு மருத்துவ உதவித் தொகையாக,சிவராம் நகர் குடியிருப்போர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் சேர்ந்து ரூ.1,10,500 /உதவித் தொகையை இன்று வழங்கினர்.

சிவராம் நகர், கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்ற நிகழ்வில் பாப்பம்மாளுக்கு ஒரு லட்சம் ரூபாயை கோவை மாநகர திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் வழங்கினார்.

இந்த நிகழ்வில்,சிவராம் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் எத்திராஜ், செயளாலர் கீர்த்தன்,பொருளாளர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர்கள் சிஜே.ரகுநாதன், ஏ.எஸ்.இளங்கோ, எம்.தக்ஷன்,செல்வராஜ் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பலர் கலந்து
கொண்டனர்.

மேலும் படிக்க