• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடியில் போட்டியிடுவது எனது பலம், நான் பலிகடா ஆக்கப்படவில்லை – தமிழிசை

March 22, 2019 தண்டோரா குழு

தூத்துக்குடியில் போட்டியிடுவது எனது பலம், நான் பலிகடா ஆக்கப்படவில்லை என்று தமிழக பஜாக தலைவர் தமிழிசை செளந்திர ராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக 40 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும் பாஜக சார்பில் தமிழிசை செளந்திரராஜனும் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்திரராஜன்,

தூத்துக்குடியில் இரண்டு பெண்கள் போட்டியிடுவது ஆரோக்கியமானது. மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். வலிமையான பிரசாரத்தில் பா.ஜ., ஈடுபடும். ஆக்கப்பூர்வமான அரசியலையே விரும்புகிறேன். எதிர்மறை அரசியலை விரும்பவில்லை. தூத்துக்குடியில் போட்டியிடுவது எனது பலம், நான் பலிகடா ஆக்கப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.

மக்களின் எண்ணமே எங்கள் எண்ணம். தூத்துக்குடி மக்கள் என்னை நிச்சயம் வெற்றி பெற வைப்பார்கள். தூத்துக்குடியில் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெற மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க