• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான் – நடிகை பாவனா

February 28, 2017 தண்டோரா குழு

“துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான். அவற்றிலிருந்து மீண்டு வருவேன்” என்று நடிகை பாவனா உருக்கமாக கூறியுள்ளார்.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதி காரில் திருச்சூருக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த 5 பேரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.

இது குறித்து பாவனா அளித்த புகாரின்பேரில், நெடும்பாசேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து “இன்ஸ்டாகிராம்” சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் பாவனா.

அதில், “வாழ்க்கை என்னைச் சிலமுறை கீழே தள்ளியுள்ளது. நான் பார்க்க நினைக்காத விஷயங்களை அது காண்பித்துள்ளது. துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான்.ஆனால் ஒன்று, அவற்றிலிருந்து நான் எப்போதும் மீண்டுவருவேன். உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க