• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துப்பாக்கி கலாச்சாரம் என்ற வார்த்தையை சொல்லிவிட முடியாது – கோவை கமிஷனர்

February 15, 2023 தண்டோரா குழு

கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடந்த கொடூரமான கொலை வழக்கில் ஏழு பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி செல்ல முயன்ற இருவரை சுட்டு பிடித்தனர். இதுதொடர்பான விரிவான விளக்கத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்து டீக்கடையில் நின்று கொண்டிருந்த கொண்டயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோகுல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மேலும் அவருடன் இருந்த மனோஜ் என்பவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் பொதுமக்கள் எடுத்த வீடியோ ஆகியவற்றை ஆய்வு செய்த போலீஸ்சார் குற்றவாளிகளை கண்டறிந்தனர்.

இது தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றவாளிகள் நீலகிரி மாவட்டத்திற்கு தப்பி சென்றது தெரியவந்தது. குற்றவாளிகளில் ஒருவரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து தொடர்ச்சியாக போலீசார் ஒவ்வொரு பகுதியாக குற்றவாளிகள் தங்கி இருந்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் நீலகிரி மாவட்ட போலீசாரின் உதவியுடன் மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில்,கோத்தகிரி பகுதிக்கு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்வது தெரியவந்தது.இதனை அடுத்து கோத்தகிரி பகுதியில் போலீசார் வாகனத்தின் ஈடுபட்டு இருந்த நிலையில் நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேரை பிடித்து விசாரித்தனர். சந்தேகத்தின் பெயரில் ஏழு பேரையும் கோத்தகிரி காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டதில் ஏழு பேரும் கோவை நீதிமன்றம் அருகே நடந்த கோகுல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து ஏழு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வரும்போது மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி அருகே கைது செய்யப்பட்ட ஜோஸ்வா மற்றும் கௌதம் ஆகிய இருவரும் தங்களுக்கு வாந்தி வருவதாகவும் இயற்கை உபாதை அவசரம் என வற்புறுத்தியதால் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.அப்போது இருவரும் அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில் போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர்.சாலையிலிருந்து 100 மீட்டர் தூரம் ஓடிச் சென்றபோது அங்கே புதரில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்த கௌதம் மற்றும் ஜோஸ்வா ஆகிய இருவரும் காவலர் யூசுப் என்பவரை தாக்கினர். அதில் காவலர் யூசுப்புக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தப்பிக்க முயன்றவர்களை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது.

இருவரையும் கைது செய்த போலீசார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதல் உதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரையும் கோவை அழைத்து வந்துள்ள போலீசார் ஐந்து பேரிடமும் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தப்பிக்க முயலும் போது தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த காவலர் யூசுப் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய பாலகிருஷ்ணன்,

காவலர் யூசுப்பை தாக்கியதோடு எஸ்.ஐ எச்சரித்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாலும்,தற்காப்புக்காகவும்,காவலரை தாக்குவதை தடுப்பதற்காகவும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பொருட்டு இடுப்புக்கு கீழ்,கால் பகுதியில் சுடப்பட்டதாகவும் தெரிவித்தார்.மேலும் இந்த வழக்கில் இதுவரை கௌதம்,ஜோஸ்வா, ஜோஸ்வாவின் சகோதரர் டேனியல், அருண்குமார்,ஹரி என்ற கௌதம், பரணி சௌந்தர்,சூர்யா ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,7 பேரும் விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தவர், தப்பிக்க முயன்றவர்கள் மீது நான்கு ரவுண்டு சுடப்பட்டதில் மூன்று ரவுண்டு தோட்டாக்கள் அவர்கள் காலில் பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் நேற்று மேட்டுப்பாளையம் பகுதியில் உலா வந்தவர்கள் ஆயுதங்களை அப்பகுதியில் மறைத்து வைத்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்த பாலகிருஷ்ணன்,கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்ட பாலகிருஷ்ணன் பட்டப் பகலில் கொலை செய்தவர்கள் என்பதால் எந்த நிலைமைக்கும் செல்ல நேரிடும் எனவும், மேற்கொண்டு காவலரை தாக்காமல் இருக்க குற்றவாளிகள் சுடப்பட்டதாக தெரிவித்தார்.
இதேபோன்று நேற்று முன்தினம் இரவு நடந்த சத்திய பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஒரு தனிப்படை கேரளாவில் குற்றவாளிகளை நெருங்கி உள்ளதாகவும் தெரிவித்தவர், காவல்துறை இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைகட்டி பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார். மேலும் சத்தியபாண்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பாக்கி கலாச்சாரம் என்ற வார்த்தையை சொல்லிவிட முடியாது என தெரிவித்த பாலகிருஷ்ணன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பம்பாயில் இருந்து வந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக கூறிய குற்றச்சாட்டுக்கு அது தொடர்பான தகவல் இல்லை என மறுத்தார்.

மேலும் படிக்க