• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துடியலூர் சுற்று பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

August 3, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் இன்று மேட்டுப்பாளையம் சாலை துடியலூர், வெள்ளகிணறு, ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி வருகின்ற சனிக்கிழமை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என் மில் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து துடியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரடியாக சென்று அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் வெள்ளக்கிணறு பகுதியில் ஆதி அறக்கட்டளை திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் கலைஞரின் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி துணை ஆணையர் சிவகுமார், வட்டாட்சியர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க