• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துடியலூர் காவல் நிலையத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று !

July 13, 2020 தண்டோரா குழு

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் மேலும் 2 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு துடியலூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த 31 காவலர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 5 பேருக்கு நேற்று காலை கொரானா தொற்று உறுதியானது. இதையடுத்து துடியலூர் காவல் நிலையம் மூடப்பட்டு தற்காலிகமாக காவல் நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில்,இன்று இதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த மேலும் 2 காவலர்களுக்கு இன்று கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,அவர்கள் சிகிச்சைக்காக.இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவலர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது அங்கு பணியாற்றி வரும் காவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க