August 20, 2020
தண்டோரா குழு
கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு துறையினருக்கு ரோட்டரி இன்ட்டஸ்டரியல் சார்பில் சானிடைசர் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கொரோணா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றுக்களை தடுப்பதற்கான மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தீயணைப்புத் துறையினரும் வீதி வீதியாக கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ,கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள மாவட்ட தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் ரோட்டரி இன்ட்டஸ்ட்ரில் சிட்டி கிளப் சார்பில் தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கு சானிடைசர் கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி ஜெகதீசன் உதவி அதிகாரி தவமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை ரோட்டரி இன்டஸ்ரியல் தலைவர் ராஜசேகர் நிறுவன தலைவர் வக்கீல் பிரபுசங்கர் செயலாளர் பிரபுராம் இயக்குனர் வேல்முருகன் என்ஜினியர் சபி ஆகியோர் கலந்து கொண்டனர்.