தீபாவளியை முன்னிட்டு அக்., 25ம் தேதி முதல் கோவை கொடீசியா நுழைவு வாயில் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, அதிகப்படியான பயணிகள் மற்றும் வாகனங்கள் வந்து செல்வதால் கோவை காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா சாலை, மத்தியப் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம் மற்றும் அவினாசி சாலை ஆகிய இடங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கோவையிலிருந்து சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளை கொடீசியா நுழைவு வாயில் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இம்முறை காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் இணைந்து கொடீசியா நுழைவு வாயில் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 25.10.2019 காலை 06.00 மணி முதல் 27.10.2019 முடிய, கூட்டம் முடியும் வரை சேலம் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கொடீசியா நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. அதைப்போல், திருப்பூர் வழி பல்லடம், அவினாசி, ஈரோடு, நாமக்கல், அந்தியூர், கோபி ஆகிய பேருந்துகள் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும்.
இதுமட்டுமின்றி, இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் நலன் கருதி குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதி, நிழற்குடை வசதி ஆகியவை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்