• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தீபாவளியை முன்னிட்டு கொடீசியா நுழைவு வாயில்‌ அருகில்‌ தற்காலிக பேருந்து நிலையம்

October 23, 2019

தீபாவளியை முன்னிட்டு அக்., 25ம் தேதி முதல்‌ கோவை கொடீசியா நுழைவு வாயில்‌ அருகில்‌ தற்காலிக பேருந்து நிலையம்‌ அமைக்கப்படவுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, அதிகப்படியான பயணிகள்‌ மற்றும் வாகனங்கள்‌ வந்து செல்வதால்‌ கோவை காந்திபுரம்‌ டாக்டர்‌ நஞ்சப்பா சாலை, மத்தியப்‌ பேருந்து நிலையம்‌, நகரப்‌ பேருந்து நிலையம்‌ மற்றும்‌ அவினாசி சாலை ஆகிய இடங்களில்‌ மிகுந்த போக்குவரத்து நெரிசல்‌ ஏற்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும்‌ போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்‌ பொருட்டு கோவையிலிருந்து சேலம்‌ மார்க்கமாக செல்லும்‌ பேருந்துகளை கொடீசியா நுழைவு வாயில்‌ அருகே தற்காலிக பேருந்து நிலையம்‌ அமைக்கப்பட்டு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இம்முறை காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம்‌, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள்‌ இணைந்து கொடீசியா நுழைவு வாயில்‌ அருகில்‌ தற்காலிக பேருந்து நிலையம்‌ அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 25.10.2019 காலை 06.00 மணி முதல்‌ 27.10.2019 முடிய, கூட்டம்‌ முடியும்‌ வரை சேலம்‌ மார்க்கமாக செல்லும்‌ அனைத்து பேருந்துகளும்‌ கொடீசியா நுழைவு வாயில்‌ அருகில்‌ அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. அதைப்போல், திருப்பூர்‌ வழி பல்லடம்‌, அவினாசி, ஈரோடு, நாமக்கல்‌, அந்தியூர்‌, கோபி ஆகிய பேருந்துகள்‌ காந்திபுரம்‌ மத்திய பேருந்து நிலையத்தில்‌ இருந்து வழக்கம்‌ போல்‌ இயக்கப்படும்‌.

இதுமட்டுமின்றி, இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில்‌ பயணிகள்‌ நலன்‌ கருதி குடிநீர்‌ வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதி, நிழற்குடை வசதி ஆகியவை மாநகராட்சி நிர்வாகம்‌ சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க