• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி.மு.க. வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படுவர் – முக ஸ்டாலின்

March 8, 2019 தண்டோரா குழு

தி.மு.க. வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படுவர் – முக ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படுவர் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தி.மு.க. கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆர். எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர். கழகம் உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவு தந்துள்ளன. அவர்களுக்கு நன்றி. தே.மு.தி.க. விவகாரம் பற்றி துரைமுருகன் விளக்கம் தந்துவிட்டதால், நான் அதுபற்றி பேச விரும்பவில்லை. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். ரபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத ஆட்சி தான் மத்தியில் செயல்படுகிறது. ரபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை எப்படி பாதுகாப்பார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படுவர் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க