• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தில்லியில் வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் 5 பேர் பலி

January 10, 2017 தண்டோரா குழு

புது தில்லி அருகே காஸியாபாத் நகரில் வீடு திங்கள்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். லோனி என்ற இடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இது குறித்து காவல்துறை லோனி காவல் துறை அதிகாரி ஸ்ரீகாந்த் பிரஜாபதி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

புதுதில்லி அருகேயுள்ள காஸியாபாத் நகரில் உள்ள லோனி பகுதியில் ரஹத் என்க்ளவ் காலனி உள்ளது. அங்கே ஒரு வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. அதில் வீட்டு உரிமையாளரின் மனைவி ரேஷ்மா (35), ஷமா (8), அசியா (5), டேனிஷ் (6), மற்றும் ரேஷ்மாவின் சகோதரி ஹஸினா (28) ஆகியோர் அங்கேயே உயிரிழந்தனர்.

இரண்டு மாடி கொண்ட வீடு இடிந்து விழுந்ததில் வீட்டின் உள்ளே இருந்துவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வீடு இடிந்து இருப்பதையும் உள்ளே மக்கள் சிக்கியுள்ளதையும் பார்த்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கட்டட இடிப்பாடுகளில் சிக்கியிருந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது மற்றும் வீடும் சரியாக கட்டப்படவில்லை. இந்த விபத்தில் வீட்டின் சொந்தகாரர் இம்ரான் உள்பட மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க