• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமண மண்டபத்தில் கண்டெடுத்த தங்க நகை,பணத்தை ஒப்படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

November 25, 2024 தண்டோரா குழு

கோவை குருடாம்பாளையத்தில் தூய்மைப்பணியாளராக பானியாற்றி வருபவர் மதன்குமார்.இவரது மகள் மெளசிகா தொப்பம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

கடந்த 17 ஆம் தேதி மெளசிகா தனது தாத்தா,பாட்டியை பார்ப்பதற்காக, அவர்கள் பணிபுரியும் விளாங்குறிச்சி- காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார்.அங்கு பணி செய்துகொண்டிருந்த தாத்தா, பாட்டியை பார்த்துவிட்டு மணமகள் அறையில் இரு பைகள் இருப்பதை பார்த்துள்ளார்.அதில், தங்க நகை மற்றும் பணம் இருந்துள்ளது. உடனடியாக இரு பைகளையும் மண்டப மேலாளர் மகாலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.

அன்றைய தினம் இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத்தலைவர் ஆர் கே குமாரின் மகள் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் நகையை மறந்து வைத்துவிட்டு போயுள்ளது தெரிய வந்ததை அடுத்து,மேலாளர் உரியவரிடம் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை ஒப்படைத்தார்.

நகை மற்றும் பணத்தை மீட்டுக்கொடுத்த மாணவியை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவரும், பெண்ணின் தந்தை ஆர்.கே.குமார்,மாநில மகளிரணி தலைவி லதா அர்ஜூன்,மாவட்ட தலைவர் ரமேஷ்குமார்,மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார்,மகளிரணி மாவட்ட துணை தலைவி கார்த்திக் ரமேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் ராமஜெயம்,ஐடி விங் மாநில தலைவர் ஜெயபிரகாஷ்,திருமண மண்டப உரிமையாளர் டாக்டர் மகேந்திரன்,மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

பள்ளி மாணவியின் தந்தை மதன் குமார்,தாய் மஞ்சுளா மற்றும் குடும்பத்தார் உடன் உள்ளனர்.

மேலும் படிக்க