• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருநாவுக்கரசருக்கு வயது 70 ஆகியும் திருமணம் பற்றியே இன்னமும் யோசிக்கிறார் – ராஜேந்திர பாலாஜி

February 20, 2019 தண்டோரா குழு

திருநாவுக்கரசருக்கு வயது 70 ஆகியும் திருமணம் பற்றியே இன்னமும் யோசிக்கிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று அதிமுக- பாஜக- பாமக கூட்டணி உறுதியானது. இக்கூட்டணி குறித்து எதிர் கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த கூட்டணி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து கூறுகையில் அதிமுக- பாஜக- பாமக கூட்டணி ஒரு கட்டாயக் கல்யாணம் என்று விமர்சித்திருந்தார்.

இதற்கிடையில், டெல்லியில் ஆவின் பால் விற்பனையகத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர்
செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

திமுக கூட கூட்டணி பேச்சுவார்த்தைக்கு மற்ற கட்சிகளை அழைக்கிறது. ஆனால் அதிமுகவை மட்டும் விமர்சனம் செய்வது ஏன். இவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவார்கள். நாங்கள் மட்டும் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டுமா? அரசியல் சூழலை பொறுத்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றன. தமிழக வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை திட்டம் அவசியம் தேவை. திருநாவுக்கரசருக்கு வயது 70 ஆகியும் திருமணம் பற்றியே இன்னமும் யோசிக்கிறார். எப்போதும் அதிமுக, திமுக மட்டுமே களத்தில் இருக்கும். இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும். டிடிவி தினகரன் வேறு கட்சி ஆரம்பித்துவிட்டார். அவர் எப்படி அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முடியும் என்றார்.

மேலும் படிக்க