April 3, 2018 தண்டோரா குழு
நாளை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் கமல்ஹாசன் திருச்சி புறப்பட்டார்.
மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் நாளை திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
மேலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.