• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவை பத்திரிக்கையாளர்கள் அஞ்சலி

August 8, 2018 தண்டோரா குழு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கருணாநிதிக்கு கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ் வணக்கம்
செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், ஒரு பத்திரிக்கையாளனாக இருந்தால் தான் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துன்பங்களை உணர முடியும் என்பதை மெய்பிக்கும் வகையில் அவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கியவர் கலைஞர். திராவிட இயக்கத்தின் மூலம் சுயமரியாதையை தமிழர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் போராடிய போராளி. குடியரசில் தொடங்கி முரசொலி வரை ஏறத்தாழ தனது 14 வயதில் இருந்து பத்திரிக்கையாளனாக சமூகத்திற்கு தனது கடமையை தொடங்கியவர் இறுதிவரை மக்களின் உரிமைக்காக போராடியவர். ஒரு பத்திரிக்கையாளன் வெற்றி மற்றும் தோல்வியை எப்படி சமாளித்து போராட வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தவர். அவரது கொள்கைகளையும், தமிழ்ப்பற்றையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே இன்றைய பத்திரிக்கையாளருக்கு விட்டுச்சென்ற சொத்துக்கள் எனவும் திருநங்கை, திருநம்பி என அழைக்க கற்றுக்கொடுத்து அவர்களையும் இந்த சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ வழி வகுத்தவர் கலைஞர். மேலும் 108 அவசர ஊர்தி திட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்தி லட்சக்கணக்கான உயிர்களை காக்கவும், மென்பொருள் துறையில் பூங்காக்களை உருவாக்கி லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்க உதவியவர் கருணாநிதி. அவரது மறைவு தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு பேரிழப்பாகும் என்பதை உணர்த்து வண்ணம் கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பாக தமிழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் திரளான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க