• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக கூட்டணியில் விசிக கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு!

March 4, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களைவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில்தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 2-ம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது. இதையடுத்து, திமுக கூட்டணியில் விசிக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி மற்றும் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கூட்டணி நலன் கருதி, போட்டியிடும் சின்னம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

சிதம்பரம் தவிர விழுப்புரம், திருவள்ளூர் இந்த தொகுதிகளில் ஒன்றும் ஒதுக்கப்படும் என தெரிகிறது கூறப்படுகிறது. மேலும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தரப்பில் திருமாவளவனிடம் யோசனை தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க