• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

March 5, 2019 தண்டோரா குழு

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், திமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
ஏற்கனவே இந்த இரு கட்சிகளும் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், திமுகவுடன் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கையெழுத்திட்டனர்.

இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறும்போது,

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பாஜக- அதிமுக- பாமக கூட்டணியை தோற்கடிப்பதே எங்கள் இலக்கு. நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் வந்தாலும் திமுகவுக்கு ஆதரவு என கூறினார்.

மேலும் படிக்க