March 4, 2019 தண்டோரா குழு
திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை திமுக கூட்டணிக்கு ஆதரவு என இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கூறியிருந்தார். இந்நிலையில்,சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஐ.ஜே.கே. நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.திமுக, இந்திய ஜனநாயக கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் ஐ.ஜே.கே.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் ஐ.ஜே.கே போட்டியிடும் என்று ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார்.