• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுகவுக்குப் பதிலடி கொடுத்த விஜயகாந்த்.

March 30, 2016 முகமது ஆசிக்

வட சென்னை தேமுதிக மாவட்டச் செயலாளர் யுவராஜ் இன்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

யுவராஜ் கட்சி தாவிய அடுத்து சில மணி நேரத்தில் வடசென்னை மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை அறிவித்து திமுகவுக்கு பதிலடி கொடுத்தார் கேப்டன்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வடசென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்களாக கு.நல்லதம்பி எம்.எல்.ஏ., கழக இளைஞர் அணி து.செயலாளர், மு.தளபதி,

தலைமை செயற்குழு உறுப்பினர், ப.மதிவாணன், ஆகியோர் இன்று முதல் நியமனம் செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மாவட்டம், பகுதி, வட்டம், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும்,

முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் வளர்ச்சியடைய, சிறப்புடன் செயல்பட அனைவரும் பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யுவராஜ் கட்சி தாவிய அடுத்து சில மணி நேரத்தில்வடசென்னை மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை அறிவித்து திமுகவுக்கு பதிலடி கொடுத்து தேமுதிகவின் பலத்தை காட்டியுள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

மேலும் படிக்க