• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திண்டுக்கல் மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பட்டியலில் யும் இணைக்க அமைச்சர் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தல்

July 16, 2018 தண்டோரா குழு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தையும் இணைக்க தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,கோவையை அடுத்த வாலாங்குளம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் அடியில் உள்ள பகுதிகளை 23.83 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பதற்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் கோவையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தையும் இணைக்க தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாக கூறினார்.மேலும்,கோவை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க