• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திங்கள் முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து இந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு !

June 30, 2017 தண்டோரா குழு

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை எதிர்த்து திங்கள்கிழமை முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளது.இதனால் தியேட்டர்களில் டிக்கெட் விலை கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன்,

58 முதல் 62% வரியை தாங்க முடியாது.சினிமா டிக்கெட் விலை கடுமையாக உயரும். இதனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து திங்கள்கிழமை முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படும். எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று வரிவிலக்கு அளிக்கவில்லை எனில் திரையரங்குகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.

மேலும், கேளிக்கை வரியுடன் ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டுமா என்பது குறித்து அரசிடம் இருந்து தெளிவான விளக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க