• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாய்க்கு தனது கையை தலையணையாக்கிய மகன்!

June 21, 2017 தண்டோரா குழு

சீனாவில் ரயிலில் பயணித்த தாயிக்கு அவருடைய மகன் தனது கையை தலையணையாக்கிய சம்பவத்தை பார்த்து மற்ற பயணிகள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவின் தென் மேற்கு மாகாணமான, சென்குடு பகுதியில் ரயிலில் ஒரு தாயும் மகனும் பயணம் செய்துக்கொண்டிருந்தனர்.அப்போது ரயில்நிலையத்தில் ரயில் நின்றபோது, ஒரு தாய் தன் குழந்தையுடன் ஏறியதைக் கண்ட அந்த சிறுவன், தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து, அந்த தாயிக்கு இடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய தாயின் அருகில் நின்றுகொண்டிருந்தான்.

அப்போது, களைப்பால் தன் தாய் தூங்குவதை பார்த்துள்ளான்.அப்படி அந்த சிறுவன், தன் தாயின் அருகில் நிற்கும் போது, தூங்கி வழிந்த தன் தாயின் கைப்பையை வாங்கி வைத்து கொண்டதோடு, தன் கையை, அவருக்கு தலையணையாக வைத்துள்ளான்.

அந்த சிறுவன் தன் தாயின் அருகில் நின்றுக்கொண்டு, தன் சிறிய கைகளை தாயிக்கு தலையணை வைத்திருப்பதை ரயிலிருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து, சீன இணையதளமான ‘வீபோ’வில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அந்த சிறுவனின் பெற்றோர் யார் என்று கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள். என் எதிர்கால மகளை அந்த சிறுவன் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று அவனிடம் நான் கேட்கவேண்டும்” என்று வீபோ இணையதள பயனாளி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க