• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாஜ்மஹால் நுழைவுக்கட்டணம் அதிரடி உயர்வு

December 10, 2018 தண்டோரா குழு

உலக அதிசயங்களில் ஒன்றான உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் நுழைவுக் கட்டணம் அதிரடியாக ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹாலை காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வந்து செல்கின்றனர். இதுவரை தாஜ்மஹாலை காண ரூ.50 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இன்று நுழைவுக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.250, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.1,300 செலுத்த வேண்டும். சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ரூ.540 க்கு பதிலாக ரூ.740 நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ரூ.50 டிக்கெட் பெறும் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே சமயம் அவர்கள் தாஜ்மஹாலின் வெளிப்புறம் மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த கட்டண உயர்வு இன்று (டிச.,10) முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து ஆக்ராவில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறை தலைவர் வசந்த் ஸ்வர்னாகர் கூறுகையில்;

மாசுபாடுகளில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காக தாஜ்மஹாலை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு இதற்காக நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க