• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலையில் முண்டாசு கட்டிகொண்டு விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

August 3, 2020 தண்டோரா குழு

விவசாய நிலங்களையும் உணவு உற்பத்தி உள்ளிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்க கூடிய சட்ட திருத்தங்களை நிறைவேற்ற கூடாது என தலையில் முண்டாசு கட்டிகொண்டு விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது நூதன முறையில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு 10க்கு மேற்பட்ட விவசாயிகள் புகார் மனு அளிக்க வந்தனர். 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய புகார் மனுவை அளித்தனர். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார வரைவு சட்டம் திருத்தங்கள் விவசாயிகளுக்கு வழங்க கூடிய இலவச மின்சாரம் இரத்து ஆகும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம், வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் அவசர சட்டம், விவசாயிகளின் விளை பொருட்களான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு பாதுகாப்பு அவசர சட்ட திருத்தங்கள் விவசாய நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் உணவு உற்பத்தி பெரியளவில் பாதிக்க கூடிய நிலை இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் தமிழக அரசு விவசாயிகளிடம் அதில் உள்ள குறைகளை கேட்டறிந்து சரிசெய்ய வேண்டும் என்கிறார்கள். மேலும் எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் உதவிட கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க