• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இயக்குவது யார்? வாகை சந்திரசேகர் கேள்வி

June 25, 2018 தண்டோரா குழு

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இயக்குவது யார் என பேரவையில் திமுக எம்.எல்.ஏ.வாகை சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது.முன்னாள் எம்.எல்.ஏ வேதாசலம் மறைவுக்கு பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.அப்போது பேரவை துவங்கியதும் திமுக எம்.எல்.ஏ.வாகை சந்திரசேகர் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

சினிமா துறை அழிவுக்கு காரணமானவர்கள் தமிழ் ராக்கர்ஸ்.திரைப்படங்கள் வெளியான அன்றே இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் யாருடையது,இயக்குபவர் யார் என்று பேரவையில் வாகை சந்திரசேகர் கேள்வி எழுப்பினர்.மேலும்,தமிழ் ராக்கர்ஸை மாநில மற்றும் மத்திய அரசுகளின் உதவியோடு தடுத்திட வேண்டும் என சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தை முடக்கிவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் சில நாட்களுக்கு முன் அறிவித்தது.ஆனால்,அறிவித்த சிறித நேரத்திலேயே அந்த இணையத்தளம் மீண்டும் வேறு லிங்கில் இயங்க துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க