• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை-நடிகை அமிர்த அய்யர்

February 6, 2023 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை திறமையான அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது கோவையில் நடிகை அமிர்த அய்யர் கூறியுள்ளார்.

கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் தனியார் நகைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிகில் பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

தற்போது ஹனுமன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன்.தமிழ் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமை உள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.கோவைக்கு நான் சிறுவயதிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன்.கல்லூரி படிக்கும் போது பலமுறை கோவை வந்துள்ளேன்.

ஒவ்வொரு முறையும் வரும் போதும் புது அனுபவமாக உள்ளது. எனக்கு கோவை உணவு என்றால் மிகவும் பிடிக்கும்.ஒவ்வொரு முறை வரும்போதும் கோவை உணவை ருசிப்பதில் ஆர்வமாக இருப்பேன்.நேற்று வந்த போது ஒரு இனிப்பு வகை சாப்பிட்டேன்.அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என தெரிவித்தார்.

மேலும் படிக்க