• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை 17 இடங்களில் நடைபெறுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்

January 2, 2021 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை 17 இடங்களில் நடைபெறுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

வல்லரசு நாடுகள் ஊரடங்கில் உள்ள சூழலில், தமிழ்நாடு நிம்மதியாக உள்ளது. தமிழ்நாடு வெற்றி மாடலை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என பிரதமர் சொல்லியுள்ளார். கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும் பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.உருமாறிய கொரோனா வைரஸ் வந்தாலும் எதிர்கொள்ள வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி ஒத்திகை 17 இடங்களில் நடைபெறுகிறது. தடுப்பூசி போட 47 ஆயிரத்து 500 மையங்களை கண்டறிந்து உள்ளோம். தடுப்பூசி போட 27 ஆயிரத்து 500 செவிலியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாகவும், முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க