• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை

November 10, 2020 தண்டோரா குழு

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் ஆண்டு தோறும் வேளாண்மை முதுகலைப் படிப்பு மற்றும் பட்ட படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி வருகிறது.
இதில் வெற்றி பெறக்கூடிய மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.குறிப்பாக அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் காளீஸ்வரி(Horticulture) பவித்ரா(Social Sciences) பூஜா(Agri. Engineering) உள்ளிட்டோர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக மற்றும் அதை சார்ந்த கல்லூரிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக மாணவ மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க