தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 68 காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை பொதுமக்கள் சார்பாக கோயம்புத்தூர் மத்திய மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரனிடம் நேற்று புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அம்மனுவில் காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை சந்திக்கும் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை நீர் சாக்கடை வடிகால் வாயிலாக செல்லாமல் தெருக்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் செல்வதாகவும் சம்பந்தப்பட்ட இந்தப் பகுதியில் இரண்டு மழலையர் பள்ளி மருத்துவமனை மற்றும் 95 சதவீதம் குடியிருப்பு பகுதியாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் பெரும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் மேலும் அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகளால் நடந்து செல்பவர்கள் மீது சாக்கடை தண்ணீர் தெளிக்கப்பட்டு நடந்து செல்பவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,இன்று காலையிலேயே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாக்கடையை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது