• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் தமுமுக சார்பில் ரூ.3 கோடிக்கு மேல் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

April 28, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் 30 நாட்கள் ரூ.3 கோடிக்கு மேல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பாதிப்பால் நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு அமைப்பினர் உதவி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சமூகப்பணியில் ஈடுபட்டு வருகிறது. அவ்வமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் உணவு கசாயம் வழங்கப்பட்ட நபர்கள் 2 லட்சத்து 7 ஆயிரத்து 591 நபர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உணவு பொருட்கள் காய்கறி பருப்பு மளிகை பொருட்கள் 70 ஆயிரத்து 866 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் தற்போது வரை 3 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து 592 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க