• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு காவல்துறை மற்றும் voice of voiceless அமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் !

October 18, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு காவல்துறை மற்றும் voice of voiceless என்ற அமைப்பு (முன்னாள் காவல்துறையினர்) சார்பில் “Prevention of Custodial Violence”என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் C.சைலேந்திர பாபு. வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு காவல் துறை கூடுதல் இயக்குனர் K.சங்கர் தலைமையில்,கோவை மண்டலம், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகர காவல் துறையினருக்கு, தமிழ்நாடு காவல்துறை மற்றும் voice of voiceless என்ற அமைப்பினரும் (முன்னாள் காவல்துறையினர்) இணைந்து “Prevention of Custodial Violence”என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கோவை மாநகர காவல் ஆணையர், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர், கோவை சரக துணைத் தலைவர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோவை மாநகர காவல் துணை ஆணையர்கள், கோவை மாவட்ட சிறப்பு நீதிபதி.A.S. ரவி, வழக்கறிஞர் V.P சாரதி, U. சங்கரநாராயணன்,DDP(Rtd) மற்றும் முன்னாள் காவல்துறையினர் ஆகியோர் பங்கேற்று சட்ட வழிமுறை களையும் அவர்களது அனுபவங்களையும் எடுத்துக் கூறினார்கள்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திர பாபு வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். இதில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு பண வெகுமதியும் வழங்கப்பட்டது. மேற்படி கருத்தரங்கில் “Prevention of Custodial Violence”என்ற தலைப்பில் கட்டுரை எழுதி சமர்ப்பித்த சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர், அருணுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க