தமிழை வைத்து திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் லாபம் பெற்று வருவதாக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் நாளை பாதையாத்திரை நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறினார். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள வைசியாள் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் இப்பாதயாத்திரை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கட்சி சார்ந்த எந்த அடையாளமும் பின்பற்றப்பட மாட்டாது என்று கூறிய அவர், தேசியக்கொடி மட்டுமே பாதையாத்திரை நிகழ்ச்சியில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாகவும், கிராமப்புறங்களுக்கு பாதயாத்திரை செல்லும்போது இரு மடங்காக மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்கும் ஒரே கட்சியாக பாரதிய ஜனதா இருப்பதாக கூறிய அவர், தமிழை வைத்து திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் அரசியல் லாபம் பார்த்து வருவதாக குற்றம்சாட்டினார். அமித்ஷாவின் கருத்துக்கு எதிரான போராட்ட அறிவிப்பை பொய்க் காரணங்களைக் கூறி வாபஸ் பெற்றதே திமுகவின் தகிடுதித்தங்களில் ஒன்றுதான் எனவும் அவர் விமர்சித்தார். பிரதமர் மோடி தமிழ் மொழியின் மீது மிகுந்த அன்பும், காதலும் கொண்டவர் என புகழாரம் சூட்டிய எஸ்.ஆர் சேகர், உலக அளவில் தமிழ் மொழியின் பெருமையை பரப்புவதில் பிரதமர் மோடி அனைவருக்கும் முன்னோடியாக இருக்கிறார் என்று கூறினார். இதற்காக அனைத்து தமிழ் மக்களின் சார்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பு பொதுச்செயலாளர் ரமேஷ், கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் – பீட் டிராப்பர்
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்