• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழர் உயிரிழந்த விவகாரம், கேரளா முதல்வர் மன்னிப்புக் கோரினார்

August 10, 2017 தண்டோரா குழு

தமிழருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்த விவகாரம் தொடர்பாக கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரினார்.

தமிழகத்தைச் சேர்ந்த முருகன் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தில் சிக்கிய முருகனுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க மறுத்ததலால் அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் “இதன் மூலம் மருத்துவமனைகள் மிகப் பெரிய களங்கத்தை கேரளாவுக்கு ஏற்படுத்திவிட்டன. இது போன்ற செயல் மிகவும் கொடூரமான செயல். இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சட்டங்களில் திருத்தங்களை அமல்படுத்துவோம்,” என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கோரினார்.

மேலும் படிக்க