February 8, 2019 தண்டோரா குழு
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2019 -20-ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வரும் 11 முதல் 14 வரை சட்டசபை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு 14-ம் தேதி நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார் என்று அவர் தெரிவித்தார்.
கூட்டத்தொடர் நடைபெறும் நான்கு நாட்களும் கேள்வி நேரம் இருக்கும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.