• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

February 8, 2019 தண்டோரா குழு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2019 -20-ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வரும் 11 முதல் 14 வரை சட்டசபை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு 14-ம் தேதி நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

கூட்டத்தொடர் நடைபெறும் நான்கு நாட்களும் கேள்வி நேரம் இருக்கும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.

மேலும் படிக்க