• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக சிறை தொழிற்கூடங்களுக்கு ரூ.38 கோடி மூல பொருட்கள் வாங்க டெண்டர்

February 7, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் சென்னை புழல் 1,2,கோவை, பாளையங்கோட்டை,திருச்சி,மதுரை,சேலம் என 11 பிரதான சிறைகள் உள்ளது.இந்த சிறைகளில் சுமார் 22 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இதில் தண்டனை கைதிகளுக்காக சிறைகளில் தொழில் கூடங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பேப்பர் பொருட்கள், சீருடை, ஷூ, சாக்ஸ், தையல், அட்டை பெட்டி என பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

கொரோனா நோய் பரவல் நிலையில் சிறைகளில் உற்பத்தி வெகுவாக முடங்கியது. தற்போது தொழிற்சாலைகள் வழக்கம் போல் இயக்கத்திற்கு வந்து விட்டது. நடப்பாண்டில் உற்பத்திக்கு தேவையான மூலபொருட்களை கொள்முதல் செய்ய சிறைத்துறை நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. மாநில அளவில் 11 சிறைகளுக்கும் 38 கோடி ரூபாய் செலவில் மூல பொருட்கள் மற்றும் தொழிற்சாலை இயந்திரங்களுக்கான உதிரிபாகங்கள் பெறப்படவுள்ளது.

போலீஸ், தீயணைப்பு, வனத்துறையினர் பயன்படுத்தும் பெல்ட், பக்கிள், ஷூ தயாரிக்க தேவையான பொருட்கள், மரகட்டைகள், காடா துணிகள் போன்றவை கொள்முதல் செய்யப்படவுள்ளது.

சிறைத்துறையினர் கூறுகையில், ‘‘

சிறை கைதிகள் தொழில் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். சுமார் 5 ஆயிரம் கைதிகள் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். தண்டனை காலம் முடிந்து வெளியே சென்று வேலை செய்ய தேவையான தகுதிகளை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். சிறைகளில் நடக்கும் கட்டுமான பணிகளில் கைதிகள் சிலர் வேலை செய்கிறார்கள். பெட்ரோல் பங்குகளிலும், திறந்த வெளி சிறையில் விவசாய பணி, சிறைத்துறை கேண்டீன், டீக்கடையிலும் கைதிகள் வேலை ெசய்து வருகிறார்கள். சிறை நிர்வாகம் கைதிகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகளையும், திருந்தி வாழ நல்ல சூழலையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது, ’’ என்றனர்.

மேலும் படிக்க